Tuesday 11 December 2012

பூக்காரம்மா...

மகாகவி பிறந்த தினத்தில் பெண் அடிமைத்தனத்தினை தீயிடுவோம் 
பூக்காரம்மா...

Sunday 2 December 2012

மரணமடையும் மனிதம்



கொலை செய்தால் கொலைதான் தண்டணை என்றால்- தண்டனையாக கொடுக்கப்பட்ட கொலைக்கு என்னதான் தண்டணை? #தூக்கினை தூக்கில் ஏற்றுங்கள்.” –இது நான் காசாப் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அன்று என் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. ஏகப்பட்ட எதிர்ப்பு குறுஞ்செய்திகள் என் அலைபேசியில் வந்து குவிந்துவிட்டன. “160 மனிதர்களை கொன்று குவித்தவனை மன்னித்து விட சொல்கின்றாயா?” என்றும்- “ அவனை உயிரோடு விட்டால் இன்னும் பல மனித உயிர்கள் அவனால் பலியாகும்” என்றும்- நீ என்ன அந்த தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டாயா?” என்றும் மாறி மாறி கேள்விகள். நானும் எனக்கான பதிலை கூறாமல் இல்லை. அவர்கள் எனது விளக்கத்தினை ஏற்க கூடிய மன நிலையிலும் இல்லை. இதோ இப்போது இதனை படித்துக்கொண்டிருக்கும் உங்களில் பெரும்பாலானோர் என் விளக்கத்தினை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதும் கூட எனக்குத் தெரியும்.

Friday 9 November 2012

சாட்டை - கலைப்பார்வை


என்னமோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகின்றன. ஆனால் அந்த படங்கள் பெரும்பாலான மக்கள் மத்தியில் அவ்வளவாக பேசப்படுவதில்லை. ஒன்றுக்கும் ஆகாத இந்த காதல் திரைப்படங்களுக்கும்- “என்னதான் சொல்ல வர்ரானுக”னு புலம்ப வெக்கின்ற அடிதடி திரைப்படங்களுக்கும் இருக்கின்ற வரவேற்ப்பு சமூக அக்கறை கொண்ட படங்களுக்கு சற்று குறைவாகவே இருக்கின்றது. இந்த நிலையிலும் சாட்டை போன்ற திரைப்படங்கள் இப்பொழுதும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு உண்மையான கலைஞனுக்குள்ளும் இன்னும் சமூகத்தின் மீதான அக்கறையும் எதையும் (லாபம்) எதிர்பார்க்காத தன்மையும் குறையவில்லை என்பதனையே இது காட்டுகின்றது. சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை அடித்து விலாசி எடுக்கும் திரைப்படங்களின் வரிசையில் “சாட்டை”க்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

Friday 2 November 2012

கும்பாபிஷேகம் எதற்காக??

நமக்கு நமது அப்பாவின் பெயர் தெரிந்திருக்கும். அப்பாவினுடைய அப்பாவின் பெயரும் கூட ஓரளவுக்கு தெரிந்திருக்கும். அவருடைய அப்பாவின் பெயரோ, அவரது பாட்டையாவின் பெயரோ நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் எனது அப்பாவை பெற்ற அப்பாவினுடைய பாட்டையா, நாங்கள் இப்போது குடியிருக்கும் ஓட்டு திண்ணை வீட்டினை கிரயத்திற்கு வாங்கியுள்ளார். அந்த கிரய பத்திரங்களை எங்கள் வீட்டின் வயது முதிந்தவர்களின் உதவியுடன் படிக்கும் போது ஏழு தலைமுறையினரின் பெயர்களையும் இப்போது அவர்களின் சந்ததிகள் எங்கெல்லாம் பிரிந்து பரவி வாழ்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். உண்மையில் வரலாறு என்பது தேடும்போதும் சரி அதனை அறிந்து கொள்ளும் போதும் சரி ஒரு இனம் புரியாத ஆர்வமும் மகிழ்ச்சியும் மனதை கவ்விக்கொள்கின்றது.

Friday 26 October 2012

பெண்கள் மத்தியில் பெண்ணியம்...


சமையலறைக்கு வாக்கப்பட்ட பெண்கள்- இப்போது அந்த சமையலறையை விவாகரத்து செய்ய துவங்கி வருகின்றனர். இது சரியா? தவறா? சரி என்றால்- யார்தான்  அடுத்து சமைப்பது? தவறென்றால்- ஏன் ஆண்களும் சமைக்க கூடாது? அது பெண்ணுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியா? இல்லை சமையல் செய்வதுதான் பெண்களின் தொழிலா? வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டுமா? கட்டிலறையும்- சமையலறையும் மட்டும் தான் பெண்களுக்கானதா?

இதைப்படித்ததும் இது என்ன முட்டாள்தனமான கேள்வியாக இருக்கின்றது என்றோ? இந்த கேள்விகளுக்கான எதிர்ப்பு பதில்களை உங்கள் மனம் தேட துவங்கியிருந்தாலோ- நீங்களும் ஒரு ஆணாதிக்கவாதி என்பதனை ஏற்றாக வேண்டும்.

ஆதியில் விவசாயத்தினை கண்டுபிடித்த பெண்களின் தன்மைகள் இன்று பல ஆக்கப்பூர்வ சிந்தனைகளை தனக்குள் பூட்டி வைத்திருக்கும் பெண்களின் தன்மைகளோடு ஒத்துப்போகின்றது.

பெண்ணியம், பெண் சுதந்திரம் குறித்த கருத்துகள் மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையில் பெண்கள் பெண்ணியம் குறித்து புரிதலில் இருக்கின்றனரா? பெண் சுதந்திரம் பெண்களிடம் எந்த அளவில் சென்றடைந்துள்ளது? இந்த கேள்விகளுக்கான பதில்களை ஒரு சிறு கள ஆய்வு மூலம் அறிந்து கொள்ள நினைத்தேன்.

Wednesday 17 October 2012

காணாமல் போன மின்சாரம்...



என் சிறுவயதில் எப்பொழுதாவது இரவு நேரங்களில் எங்கள் தெருவில் மின் தடை ஏற்படும். மின் தடையானாலும் சரி மின் தடை நீங்கி வெளிச்சம் வந்தாலும் சரி ஒரு பேரிறைசலால் அந்த நொடியில் தெருவே அலரும். அந்த இனிமையான பேரிறைச்சலையோ, இருளில் விளையாடும் ஐஸ் விளையாட்டினையோ, இப்போதைய வாண்டு பட்டாளங்களிடம் காண்பது அரிதாகிப்போனது. நம் குழந்தைகளின் சுதந்திரம் பரிபோனது ஒரு காரணமாக இருந்தாலும் எப்பொழுதாவது மின் தடை ஆனால் தானே!! அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எப்பொழுதுமே இதே நிலையாய் இருந்தால் எதிர்ப்புதானே வரும், வாண்டுகளுக்குமே.

Saturday 29 September 2012

சக்கையானாலும் சகித்துக்கொள்...

நான் மதுரைக்கு செல்லும் பொழுதெல்லாம்  அதிகமான சமயங்களில் காளி மார்க், பவண்டோ விரும்பி அருந்துவது வாடிக்கை. கோடை காலத்தில் என் பிரத்யோக பானம் கரும்பு சாறு. நாம் போய் கேட்டவுடன் நாமக்காக சீவி சிங்காரித்து இருக்கும் கரும்பினை, கரும்பு ஆட்டும் இயந்திரத்தில் இரு இரும்பு உருளைகளுக்கு நடுவில் விட்டு பிழிந்தெடுத்து சாறு சேகரிப்பார்கள் அப்படி சேகரிக்கும் போது ஒரு முறையோடு நிறுத்திவிடாமல் சுமார் நான்கு ஐந்து முறையும், நீர் சத்து அதிகம் உள்ள கரும்பு எனில் அதற்கும் மேல் அதனை (ஆட்டி) பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் அந்த  கரும்பு இரு உருளைகளுக்கு நடுவில் தலையை விட்டு வெளியே சக்கையாகி வரும் போது அவ்வளவு தானோ என மனம் நினைக்கும் ஆனாலும் மறுபடி மறுபடி அதை திணித்து எடுக்கும் போதும் அதிலிருந்து சாறு கொட்டிய வண்ணமே இருக்கும். நாம் கொடுக்கும் விலைக்கான சாற்றினை கண்ணாடி குவளையில் எப்படியோ பிழிந்து நிறைத்து கொடுத்துவிடுகிறார்கள்.

Friday 7 September 2012

உயிர் பெற்ற இருபது சடலங்கள்...

          தீபாவளி என்பது தமிழனுக்கான பண்டிகை கிடையாது. ஆனால் திபாவளிக்கு கொளுத்தி மகிழும்  பட்டாசு, வான வேடிக்கை, மத்தாப்பு போன்றவற்றை தொண்ணுறு விழுக்காடு இந்தியாவுக்கு வழங்குவது தமிழகம் மட்டுமே. குறிப்பாக கரிசல் காட்டு மண் சிவகாசி தான் இதன் மூலதனம். ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் தங்களது தகுதியையும் காட்ட பயன்படுத்துவது இந்த பட்டாசுகளை தான். ஆரம்ப காலத்தில் சப்த்தம் அதிகமான பட்டாசுகள் தான் பணம் படைத்தவர்களால் விரும்பப்பட்டு வந்தது. அதனை கண்டு இல்லாதோரும் தங்கள் குறைந்த பண சக்திக்கு தக்க தன் பிள்ளைகளுக்கு குறைந்த சப்த்தம் வரக்கொடிய ஓலை வெடி, வரி வெடி, சீனி வெடி எனப்படும் பிஜிலி வெடி போன்றவற்றை வாங்கி கொடுத்து இல்லாத இன்பத்தை இதில் தேடினர்.

Saturday 25 August 2012

பசி, தாகம் - விற்பனைக்கு

" பசி, தாகம் - விற்பனைக்கு " இது போல ஒரு விளம்பர பதாகை இருப்பின் அந்த விளம்பர பொருளை நாம் வாங்கி நுகர விரும்புவோமா? "இல்லை" என்ற பதில் அதிகமானவர்களிடம் இருந்து வரும். ஆனால் உண்மை அதுவல்ல. நம்மில் பலர் அதையே விரும்பி நுகர்கின்றோம்.பசி தீர்க்கும் விவசாய நிலமோ, தாகம் தணிக்கும் நீர் நிலைகளோ எதுவுமே நமக்கு வரைமுறை இல்லை. கல்களை நட்டு கொடிகளை நாட்டிவிட்டால் போதும் எந்த நிலம் என்று அதன் பின்னணி என்ன என்றே அறிந்து கொள்ளாமலும் அறிந்தும் அதை பற்றி சட்டை செய்யாமலும் அதன் விலை விசாரிப்பவர்களை காண்கையில் எனக்கு அவர்கள் வேறு விதமாக தெரிகிறார்கள். விபச்சார விடுதிக்கு சென்று துணியால் மூடி இருப்பது தன் தாய் அல்லது சகோதரி என்று தெரிந்தே விலை விசாரிப்பது போலவே தெரிகிறது.

Tuesday 14 August 2012

வாழிய சுதந்திர இந்தியா!!!

          சின்ன வயசில் இந்தியனாக நான் இருந்த போது பள்ளிகளில் கொண்டாடப்படும் சுதந்திர தின மற்றும் குடியரசு தின விழாக்களில் மிக ஆர்வமாக கலந்துகொள்வேன். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து அந்த தேசிய விழாவுக்கென பிரத்தியேகமாக துவைத்து வெளுக்கபட்ட வெள்ளை சட்டையினையும் காப்பி நிற அரைக்கால் டவுசரையும் அணிந்து கொண்டு சாப்பிடாமல் கொள்ளாமல் கொடி  ஏற்றும் விழாவுக்கு ஓடியுள்ளேன். காலையில் சட்டையில் குத்திக்கொள்ளும் இந்திய தேசிய கொடியினை இரவு வரை அகற்றாமல் அப்படியே தூங்கிய காலங்களும் உண்டு. பள்ளியில் நீராருங்கடலுடுத்த பாடலை விட ஜனகன என்ற ஹிந்தி பாடலை விரும்பி பாடிய காலங்கள் அவை. கொடி  ஏற்றி பள்ளியில் கொடுக்கும் ஆரஞ்சு மிட்டாய்களை (எண்ணிக்கையும் ஆறு அஞ்சி தான்) விட்டுக்கு பத்திரமாய் கைகளில் மூடி கொண்டு வந்து என் அக்கா, அப்பா, அம்மாவிற்கு கொடுத்து சுவைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

Tuesday 7 August 2012

யார் மனிதன் ?


கண்மாய்க்குள் குடியேறி வெள்ளம் வீட்டினுல் புகுந்ததாக ஒப்பாரிப்பவனும்;
காடுகளை அழித்து குடியேறி யானைகள் அட்டூளியம் என புலம்புபவனும்;
மரங்களை வெட்டி சாலை அமைத்து மழை பொய்த்தாய் பொய்யுறைப்பவனும்;
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு  அலையப்போகின்றவனும் தான் -  இக்காலத்தில் மனிதன்.

Tuesday 31 July 2012

ஆரியன் திருடிய, தமிழர் பண்பாடு...

          நாம் இப்போது பயன்படுத்தும் வட(ஆரிய) மொழி கலப்பு வார்த்தைகள் எப்படி தமிழ் மொழியை அசிங்கம் செய்கின்றனவோ, அதே போல நமது பல்வேறு கலாச்சாரங்களும் பண்பாடுகளும் ஆரிய கலப்பால் கேளிக்கூத்தாகின்றது. ஆதியில் நாம் பின்பற்றிய பழக்கங்கள் அனைத்துக்குமே ஒவ்வொரு காரண காரியம் உண்டு. மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்ததில் இருந்து ஆடை அணியும் முறை வரை அனைத்துமே நமது தட்ப வேட்ப நிலையை கருத்தில் கொண்டும் நாம் வாழும் பகுதிக்கு ஏற்றார்ப்போல் வாழ்க்கை முறையை வகுத்து வாழ்ந்துள்ளோம். நாம் பின்பற்றிய வாழ்வியல் முறைகளை ஆரியன் அவனது கவர்ச்சியை புகுத்தி அதன் மயக்கத்தில் நம்மை கிடத்தி பின் நமக்குள் பயத்தினை உண்டுபண்ணி நமக்கான வாழ்வியல் முறையையே அவனுடைய பிழைப்புக்கான சூத்திரத்தினையும் சேர்த்து நம்மிடமே கொண்டுவந்து மூடனாக்கிவிட்டான். ஒரு சில விடயங்களை பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கு எழுதியுள்ளேன்.

Thursday 12 July 2012

தமிழா, முன்னேறு தமிழோடு...

தாயை நேசிக்காதவனே,
தாய் மொழியையும் நேசிக்கமாட்டான்..

நம் பழந்தமிழர்கள் பயன்படுத்திய தமிழர் வாழ்வியல் முறைகளை நாம் பின்பற்றினால் போதும் நமக்கான வளர்ச்சியும், இன்பமும் என்றும் நம்முடன் இருக்கும். இயற்க்கையை நேசித்த நம் பாட்டனார்கள், மரங்களை பாதுகாத்து காட்டிலேயே வாழ்க்கை நடத்தியுள்ளனர். காட்டில் கிடைக்கும் காய் கனிகளை உண்டும், மூலிகைகளை பயன்படுத்தி நோய் நீக்கியும், இனிய காற்றினை சுவாசித்தும் வாழ்ந்துள்ளனர்.

Friday 29 June 2012

ஆரிய கைப்பிள்ளை திராவிடம்


                   உலகின் முதல் மனித உயிரும் முதல் இனிய மொழியும் உண்டான குமரிக்கண்டத்தினை பற்றி அறிந்து கொண்ட நாட்களில் இருந்து நானும் ஒரு தமிழன் என்ற கர்வம் என்னுள் அரும்பு விட்டு கிளைகளாக வளரத்துவங்கிவிட்டது.
குமரிக்கண்டம். குமரி என்றால் சோற்றுக்கற்றாழை என்று நாம் நாட்டுப்புறத்தில் மக்கள் சொல்லக்கூடிய ஒரு மூலிகைச்செடி. குமரிச்செடி மிகுந்து காணப்பட்டதால் குமரிக்கண்டம் என்ற காரணப்பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். இதனை இலெமூரி கண்டம் என்றும் அழைத்துள்ளனர். மூலிகை இலை நிறைந்து காணப்பட்டதே இந்த காரணப்பெயருக்கும் காரணம்.
 இலை மூலிகை - இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமுரிய என வழக்காகிப்போனது.

Friday 22 June 2012

ஆரிய வலையில் தமிழ் மீன்


தமிழே ஞாலத்தின்(உலகின்) முதன் மொழி, அதேபோல தமிழனே ஞாலத்தில் முதல் மாந்தன்(மனிதன்) என்று தமிழ் ஆர்வளர்கள் மட்டுமல்ல மொழி ஆய்வாளர்களும் அறிஞர்களும் சொல்லியும் எழுதியும் உள்ளதன் காரணம் தமிழர்களாகிய நாம் நமது வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, நமது தமிழ் பரம்பரைக்கும் நமது வரலாற்றினை பிழையின்றி கொண்டு சேர்க்கவுமே.

அதன்படி தமிழறிஞர்.திரு.தேவநேய பாவணர் அவர்களின் தமிழ் ஆய்வுகள் என்னை மிகவும் பாதித்தது. அவருடைய ஆய்வுகளோடு என் ஆதங்கங்களை  எழுத்தில் சேர்த்துள்ளேன்.

Friday 15 June 2012

மதுரையில் கண்மாயை காணவில்லை


             தண்ணீர், உயிர் வாழ்வதற்கான சொத்து.நீருக்காக உலக அரங்கில் போராட்டம் மூளும் இத்தருணத்தில் அதன் முக்கியத்துவம் குறித்து உணரவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்னும் நாம் உணராதிருந்தால் இன்னொரு இருநூறு ஆண்டுகளில் மனித இனம் மாத்திரமல்ல, எந்த உயிரினமும் இப்புவியில் வாழ்வது அரிது. நம் முன்னோர்கள் செய்த தவறால் நாம் இப்படி சிக்கி தவிக்கின்றோம். இதே தவறை நாமும் செய்து நம் சந்ததிகளுக்கு வேதனை ஏற்ப்படுத்த வேண்டாம். இந்த நேரத்தில் அதே முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பல நல்ல செயல்களையும் நாம் தொடர வேண்டும். அவர்கள் செய்த அந்த நல்ல செயல்களாலேயே, நாம் இன்று வரை உடலில் உயிர் பிடித்து வாழ்கிறோம்.

Monday 11 June 2012

நவீன ஆண்



சிறைச்சாலை போல எங்கு திரும்பினாலும் பழுப்பு நிறத்தில் அழுக்கேறிப்போய் கிடக்கும் சுவர். அங்கும் இங்கும் எங்கு திரும்பினாலும் ஏழைகளே இருக்கிறார்கள் உண்டியல் வருமானத்தில் பிழைத்துவரும் கோவில்களில் இருப்பதை போல. மண் தரையோ சிமென்ட் தரையோ துண்டை விரித்து படுத்து கிடக்கும் சொந்த பந்தங்கள். மாத்திரைகளை தவிர அந்த பகுதி முழுவதும் மருந்து நாற்றம். உள்ளே வந்தாலே போதும் குணமாக்கிவிடும் அந்த மருந்து நாற்றம் நம் அரசு மருத்துவ மனைகளை தவிர வேறெங்கு சென்றாலும் கிடைக்காத  அரிய  பொக்கிஷம்.

விவசாயம் விற்ப்பனைக்கு

விளை நிலங்கள் அனைத்தும் விலை நிலங்கள் ஆனது..
ஆற்று பாசனம் பக்கத்து மாநிலத்தினால் தடைபட்டு போனது..


மலை நீர்தான் கிடைக்கவில்லை, மழை நீராவது கிடைக்குமா??
பெய்யும் மழை நீரை தேக்கி வைக்கும் கண்மாய், ஊரணிகளில் மனித  குடியேற்றம்..
அவர்களுக்கு என்னவோ வெள்ள நிவாரண நிதி காத்திருக்கிறது..

Friday 8 June 2012

குடிமகன்

"குடிமகன்" என்ற சொல் நாட்டின் பிரஜை என்ற அர்த்தத்தினை உடைத்து வெகு காலங்கள் ஆகிப்போனது. 
இப்போது குடிமகன் என்றாலே மதுவிற்க்கு அடிமையான மனிதனை சித்தரிக்கும் கேலிச்சொல்லாகிபோனது.

குடியால் குடல் வெந்து இறந்தவர்களை கண்டுள்ளேன். குடியால் தங்கும் குடிசை இழந்தவர்களையும் கண்டுள்ளேன். குடியால் ஆடை இழந்து தெருவில் கிடப்பவர்களை மட்டுமே என்னால் படமாக்க முடிந்தது.
குடல் வெந்து இறந்தவர்களையோ குடிசை இழந்து தவிப்பவர்களையோ படமாக எடுக்க முடியவில்லை. அவர்களை பாடமாகவே படிக்க முடியும்.

Thursday 7 June 2012

என் மண்ணின் அவல அறிமுகம்:

முதலில் எனது அறிமுகத்தினை விட, நான் பிறந்த மண்ணின் அறிமுகம் தான் இப்போதைக்கு முதல் தேவை...

திருமங்கலம் எனது பிறப்பிடம்.

எனது ஊரை பற்றி உங்களுக்கு தெரிந்தது


1. தமிழ் ஈழ விடுதலை புலிகளை ஆதரித்து திருமங்கல மேடையில் முழங்கியதற்க்காக திரு.வைகோ அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டது,
2. தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட இமாம்அலி என்பவர் தப்பிசென்ற ஊர்.
3. இடைத்தேர்தலில் வாக்குறிமையை மூவாயிரம் ரூபாய்க்கும், பிரியாணி பொட்டலங்களுக்கும் விற்ற மக்கள் வாழும் மண்.
இதுதான் உங்களுக்கு தெரியும்.